
செய்திகள் இந்தியா
காஷ்மீர் பத்திரிகையாளர் மன்ற நிலத்தை திரும்ப பெற்றது அரசு: பத்திரிகையாளர்கள் கண்டனம்
ஸ்ரீநகர்:
காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்துக்கு இரு தரப்பினர் உரிமை கொண்டாடியதால், மன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ரத்து செய்து அந்த யூனியன் பிரதேசத்தின் நிர்வாகம் திரும்பப் பெற்றது.
"ஜனநாயகத்தின் குரலாக செயல்பட்டு வந்த பத்திரிகையாளர் மன்றத்தை மூட வேண்டும் என்ற நோக்கத்திலேயே அரசு நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது' என்று பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
2019, ஜூலை மாதத்துக்கு பிறகு காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்துக்கு தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில பத்திரிகையாளர் குழுவினர் சனிக்கிழமை போலீஸôருடன் பத்திரிகையாளர் மன்றத்துக்குள் நுழைந்து தாங்கள்தான் புதிய நிர்வாகத்தின் பிரதிநிதிகள் என்று கூறியதால் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து, "போலோ வீவ்' என்ற இடத்தில் பத்திரிகையாளர் மன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கான உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஆகையால், இந்த மன்றத்தின் பெயரை வைத்து அறிக்கைகள் வெளியிட்டால் அது சட்ட விரோதமாகும்' என்று யூனியன் பிரதேச அரசு அறிவித்தது.
இந்தச் சவாலை காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம் எதிர்கொள்ளும் என்றும் பத்திரிகையாளர் மன்றத்தை மூட வேண்டும் என்பதற்காகவே எதிர்ப்பு பத்திரிகையாளர் குழு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் முந்தைய பத்திரிகையாளர் மன்ற நிர்வாகத்தின் பொதுச் செயலர் இஷ்பக் தான்தரே தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
May 23, 2022, 8:12 pm
டெல்லிக்கு புறப்படவிருந்த நான்கு சென்னை விமானங்கள் ரத்து
May 22, 2022, 1:42 pm
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பேச்சு: கேரள அரசியல் தலைவருக்கு ஜாமீன் மறுப்பு
May 22, 2022, 12:26 pm
பாகிஸ்தானைப் போல் இந்தியாவில் மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன: ராகுல்
May 22, 2022, 12:04 pm
பொது மக்களின் எதிர்ப்புக்கு பணிந்தது இந்திய அரசு: பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது
May 22, 2022, 11:54 am
ம.பி.: உன் பெயர் முஹம்மதா என கேட்டு வயதானவரை அடித்து கொன்ற பாஜக நிர்வாகி
May 21, 2022, 5:52 pm
ஞானவாபி வழக்கை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு
May 21, 2022, 4:28 pm
ரயில்வே துறையில் வேலைக்காக லஞ்சமாக நிலம்: லாலு பிரசாத் மீது சிபிஐ புதிய பதிவு
May 21, 2022, 4:08 pm
எங்களுக்கு மன்னிக்கும் மாண்பைக் கற்றுக்கொடுத்தவர் என் தந்தை: ராகுல் காந்தி உருக்கம்
May 21, 2022, 3:04 pm