செய்திகள் இந்தியா
காஷ்மீர் பத்திரிகையாளர் மன்ற நிலத்தை திரும்ப பெற்றது அரசு: பத்திரிகையாளர்கள் கண்டனம்
ஸ்ரீநகர்:
காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்துக்கு இரு தரப்பினர் உரிமை கொண்டாடியதால், மன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ரத்து செய்து அந்த யூனியன் பிரதேசத்தின் நிர்வாகம் திரும்பப் பெற்றது.
"ஜனநாயகத்தின் குரலாக செயல்பட்டு வந்த பத்திரிகையாளர் மன்றத்தை மூட வேண்டும் என்ற நோக்கத்திலேயே அரசு நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது' என்று பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
2019, ஜூலை மாதத்துக்கு பிறகு காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றத்துக்கு தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில பத்திரிகையாளர் குழுவினர் சனிக்கிழமை போலீஸôருடன் பத்திரிகையாளர் மன்றத்துக்குள் நுழைந்து தாங்கள்தான் புதிய நிர்வாகத்தின் பிரதிநிதிகள் என்று கூறியதால் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து, "போலோ வீவ்' என்ற இடத்தில் பத்திரிகையாளர் மன்றத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கான உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஆகையால், இந்த மன்றத்தின் பெயரை வைத்து அறிக்கைகள் வெளியிட்டால் அது சட்ட விரோதமாகும்' என்று யூனியன் பிரதேச அரசு அறிவித்தது.
இந்தச் சவாலை காஷ்மீர் பத்திரிகையாளர் மன்றம் எதிர்கொள்ளும் என்றும் பத்திரிகையாளர் மன்றத்தை மூட வேண்டும் என்பதற்காகவே எதிர்ப்பு பத்திரிகையாளர் குழு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் முந்தைய பத்திரிகையாளர் மன்ற நிர்வாகத்தின் பொதுச் செயலர் இஷ்பக் தான்தரே தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
April 23, 2024, 4:43 pm
பெரும் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது: ஆம் ஆத்மி
April 23, 2024, 4:38 pm
மேற்கு வங்கத்தில் 25,753 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து
April 23, 2024, 8:35 am
முஸ்லிம்கள் குறித்து மோடியின் இனத்துவேஷ பேச்சு: காங்கிரஸ் கட்சி தோ்தல் ஆணையத்தில் புகாா்
April 22, 2024, 9:23 am
இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்: ப.சிதம்பரம்
April 21, 2024, 2:41 pm
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் செய்தி: யூடியூப் சேனல் மீது வழக்கு
April 21, 2024, 2:18 pm
வாக்களித்தால் குடிநீர்: கர்நாடக துணை முதல்வர் மீது வழக்கு
April 20, 2024, 8:44 pm
இஸ்ரேல், துபாய், தெஹ்ரான் விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா
April 19, 2024, 1:28 pm
பாஜக தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் என குறிப்பிடப்பட்டவில்லை: அசாதுதீன் ஓவைசி
April 19, 2024, 1:04 pm
சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலில் இருந்து கேரளம் திரும்பிய பெண் மாலுமி
April 19, 2024, 11:10 am