செய்திகள் மலேசியா
பிராந்திய, உலகளாவிய பதற்றங்களைத் தணிப்பதில் மலேசியாவும் பாகிஸ்தானும் ராஜதந்திர அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றன: சைஃபுதீன்
புத்ராஜயா:
உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுதியன் இஸ்மாயில், பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சையத் ஆசிம் முனீர் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின் போது, மோதல்களைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதில் மலேசியா, பாகிஸ்தானின் அனுபவங்கள் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
சைஃபுதீன் நசுதியனின் பாகிஸ்தான் பயணத்தின் போது, ராவல்பிண்டியில் உள்ள பொதுத் தலைமையகத்தில் சையத் ஆசிமுடனான இந்த சந்திப்பு நடைபெற்றது.
உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுதியன் , பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி சையத் ஆசிம் முனீர் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின் போது, மலேசியாவும் பாகிஸ்தானும் மோதல் தீர்வு பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதித்தன.
ராஜதந்திர அணுகுமுறைகள், அமைதி உருவாக்கும் முயற்சிகள் உட்பட, பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு குறித்த கருத்துப் பரிமாற்றத்திற்கு இந்த சந்திப்பு வழிவகுத்தது.
பதட்டங்களைத் தணிப்பதில் ராஜதந்திரம் , உரையாடலின் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் வலியுறுத்தின, மேலும் பேச்சுவார்த்தைகள் மூலம் மோதல் தீர்விற்கு ஆதரவளிக்க மலேசியா உறுதியளித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
தென் தாய்லாந்தில் தீவிரமடையும் கலவரம்: நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்
August 24, 2026, 3:44 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாளில் சிவசுப்பிரமணியம் டத்தோ விருது பெற்றார்
August 24, 2026, 3:07 pm
LRT இரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: 43 வயது வெளிநாட்டவர் கைது
August 24, 2026, 3:06 pm
