செய்திகள் மலேசியா
தென் தாய்லாந்தில் தீவிரமடையும் கலவரம்: நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்
மலாக்கா:
தென் தாய்லாந்தின் மூன்று மாகாணங்களில் குண்டுவெடிப்பு, அரசு அலுவலகங்கள் மற்றும் டயர்கள் கொளுத்தப்பட்ட சம்பவங்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து மலேசியா-தாய்லாந்து எல்லைப் பகுதிகளில் மலேசிய காவல் துறை தனது கண்காணிப்பையும் பாதுகாப்பையும் தீவிரப்படுத்தியுள்ளது என்று இன்று மலாக்கா ஆளுநரிடம் பட்டம் பெற்ற அரச மலேசிய காவல்படை தலைவர் டான்ஶ்ரீ முஹம்மத் காலித் இஸ்மாயில் கூறினார்.
நிலவும் சூழலில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எல்லைப் பாதுகாப்பு குறித்துப் பேசிய அவர், பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் உடனடியாக முடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக மலேசியர்கள் பலர் அடிக்கடி தாய்லாந்துக்குக் பயணம் மேற்கொள்வதால், அவர்களின் பாதுகாப்பைக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
முன்னதாக, மலாக்கா மாநில ஆளுநர் துன் முகமது அலி ருஸ்தாமின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டபோதே டான்ஶ்ரீ முஹம்மத் காலித் இஸ்மாயில் இவ்வாறு தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
