நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

கார் கைப்பிடி பிரச்சினை: வரலாறு காணாத அளவுக்குக் கார்களைத் திரும்பப் பெறும் சீனா

பெய்ஜிங்:

சீனா வரலாறு காணாத அளவுக்குக் கார்களைத் திரும்பப் பெறுகிறது. சுமார் நான்கு மில்லியன் கார்கள் மீட்கப்படுகின்றன.

டெஸ்லா (Tesla) கார்களுக்குத் தான் ஆக அதிகப் பாதிப்பு. சுமார் மூன்று மில்லியன் டெஸ்லா கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன.

சீனாவின் Xiaomi, Leapmotor, Xpeng உள்ளிட்ட நிறுவனங்கள் அடி வாங்கியுள்ளன.

கார் கதவைத் திறப்பதற்கு நவீன முறையை அறிமுகப்படுத்தியது டெஸ்லா. மின் வாகனங்களில் அது பிரபலம்.

ஆனால் விபத்து ஏற்பட்டால் என்னாகும் என்பதே கவலை.

சீனாவில் ஒரு கார் தீப்பற்றிக் கொண்டபோது சுற்றியிருப்பவர்களால் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது, கார்க் கதவைத் திறக்க முடியவில்லை.

திரும்பப் பெறப்படும் கார்களில் கதவு எங்கே இருக்கிறது என்பதைக் காட்டும் அடையாளக்குறி ஒட்டப்படும்.

டெஸ்லா, விபத்து ஏற்பட்டால் சன்னல்கள் திறக்கும் வகையில் மாற்றம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சீனா ஒரு படி மேலே போய், மறைந்திருக்கும் கதவுப்பிடி இனி தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset