நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

AI இல் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம்: பொதுமக்களுக்கு அமெரிக்க போலிஸ் எச்சரிக்கை 

வாஷிங்டன்: 

உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி அசுரவேகத்தில் உருவெடுத்து வருகிறது. 

இந்த சூழலில் செயற்கை நுண்ணறிவு மக்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. 

பலர் வேலைகளை எளிதாக்க AI செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். 

தொழில்நுட்பம் தரும் அளப்பரிய நன்மைகளுக்கு இடையே, சரியான விழிப்புணர்வு இல்லாததால் அதில் ஒளிந்துள்ள ஆபத்துகளும் தொடர்ந்து  அதிகரித்து கொண்டே வருகின்றன. 

இணையத்தில் நாம் பகிரும் தகவல்கள் ஏ.ஐ.-ன் தரவுத்தளத்தில் சேமிக்கப்படுகின்றன. சைபர் குற்றவாளிகள் இந்தத் விபரங்களை திருடி DEEPFAKE உருவகப்படுத்துதல், ஆள்மாறாட்டம் மற்றும் இணைய மோசடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 

மேலும் சட்டத்திற்குப் புறம்பான அல்லது பிறரின் கண்ணியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களைச் செய்ய ஏ.ஐ.-யின் உதவியை நாடக்கூடாது 

தொழில்நுட்பத்தை நன்மைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 'பாதுகாப்பாகப் பயன்படுத்துவோம் – பொறுப்புடன் வாழ்வோம்'.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset