செய்திகள் வணிகம்
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
கோலாலம்பூர்:
தலைநகரில் சிறப்பாக செயல்பட்டுவரும் நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது கிளையை வெற்றிகரமாக திறந்துள்ளது.
கோலாலம்பூர் ஜலான் அம்பாங் பார்க் இலகு ரயில் நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ள மெனரா பிஞ்சாய் கட்டடத்தின் தரை தளத்தில் மிகப் பிரம்மாண்டமாக தனது உணவகத்தை திறந்துள்ளது.
எங்களுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவளிக்க முக்கிய காரணம் நாங்கள் சுவை குன்றாமல் உணவுகளை வழங்குவதுதான் என்று உணவகத்தின் நிர்வாக இயக்குனர் அஸ்ரின் அன்வர் அலி கூறினார்.
தனக்கு பக்க பலமாக தனது துணைவி ரிஸ்வானா ரஃபீக் தீன் இருப்பதால் தம்மால் வர்த்தகத்தில் முழுமையாக கவனம் செலுத்த முடிகிறது என்று அவர் தெரிவித்தார்.
இன்று உணவகம் திறப்பு என்பதால் கடைக்கு வரும் அத்தனை பேருக்கும் சுவையான உணவும் பானமும் வழங்குகிறோம் என்று ரிஸ்வானா கூறினார்.
பசியோடு வருபவர்களுக்கு பணிவோடும் சுவையோடும் ஆரோக்கிய சூழலிலும் நாம் உணவைப்பரிமாறினால் அவர்கள் நம்மை விட்டு எங்கும் செல்ல மாட்டார்கள். இதுதான் எங்கள் வெற்றிக்கு காரணம் என்று அஸ்ரின் சுட்டிக்காட்டினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
"மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு என்னை நியமிக்க வேண்டாம்": டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
2030-க்குள் இந்தியா - நியூசிலாந்து வர்த்தகத்தை ரூ.35,000 கோடியாக உயர்த்த இலக்கு
July 1, 2026, 3:03 pm
பிரபலமான கன்வேயர் சுஷி உணவகமான சுஷிரோ, KLCC கிளையை மூட சுகாதார அதிகாரிகள் உத்தரவு
June 30, 2026, 11:39 am
