செய்திகள் மலேசியா
புஞ்சாக் ஆலாமில் வெள்ளம் ஏற்படக்கூடிய மூன்று பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன
கோலா சிலாங்கூர்:
பண்டார் புஞ்சாக் ஆலாமில் வெள்ளம் ஏற்படக்கூடிய மூன்று பகுதிகளை சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை தரப்பு கண்காணித்து வருகிறது.
தாமான் தாசேக் அலாம் சூர்யா, தாமான் சகெரா புர்னாமா, மற்றும் ஜாலான் பெர்சியாரான் புஞ்சாக் ஆலாம் 6 ஆகியவை அந்த மூன்று பகுதிகளாகும் என்று சிலாங்கூர் JBPM நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் அஷ்ருல் ரிசால் கூறினார்.
கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு நிலையத்தின் ஆறு தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்படுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, அப்பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, பண்டார் புஞ்சாக் ஆலாம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொலிகள் வைரலாகின.
தற்போதைய நிலைமையைக் கண்காணிப்பதற்கும், வெள்ள நிலைமை மோசமடைந்தால் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும், சிலாங்கூர் ஜேபிபிஎம் சம்பந்தப்பட்ட பகுதியைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2026, 5:32 pm
கிழக்குக் கரை ரயில் பாதை சேவை: டிசம்பர் 2026ஆம் ஆண்டு தொடங்கும்
August 14, 2026, 5:31 pm
திரெங்கானு அரசவையை அவமதித்ததாக ஆடவருக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை
August 14, 2026, 4:01 pm
பெட்ரோல் நிலையத்தில் ஆடவர் பாராங்கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம்: சந்தேக நபரைப் போலிஸ் தேடுகிறது
August 14, 2026, 9:34 am
போதைப்பொருள் கடத்தில் ஈடுப்பட்ட விமானி வழக்கு: விசாரிக்க மலேசியாவிற்கு அனுமதி: சைபுடின்
August 13, 2026, 6:05 pm
சிங்கப்பூர் குப்பைகளை ஜொகூரில் கொட்டிய 9 நிறுவனங்களிடம் விசாரணை
August 13, 2026, 4:06 pm
