செய்திகள் மலேசியா
பெட்ரோல் நிலையத்தில் ஆடவர் பாராங்கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம்: சந்தேக நபரைப் போலிஸ் தேடுகிறது
ஷா ஆலாம்:
ஷா ஆலாம் ஶ்ரீ மூடாவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஆடவர் ஒருவர் பாராங்கத்தியால் தாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் நேற்று காலையில் நிகழ்ந்ததாக ஷா ஆலாம் மாவட்ட போலிஸ் தலைவர் சருடின் சமா கூறினார்.
இந்நிலையில் பாராங்கத்தியைக் கொண்டு தாக்கிய நபரைப் போலிஸ் தேடி வருவதாக அவர் தெரிவித்தார்
தன்னை இரு ஆடவர்கள் தாக்கியதாகவும் அவர்களில் ஒருவர் கைத்துப்பாக்கி என நம்பப்படும் ஒரு பொருளை வைத்திருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர் கூறினார்.
இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவரின் இடது கையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அவர் தற்போது கிளாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 148, 326இன் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக சருடின் சமா குறிப்பிட்டார்.
மேலும், துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக ஆயுதச் சட்டத்தின் பிரிவு 8 இன் கீழும் விசாரணை நடத்தப்படுகிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2026, 5:53 pm
புஞ்சாக் ஆலாமில் வெள்ளம் ஏற்படக்கூடிய மூன்று பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன
August 14, 2026, 5:32 pm
கிழக்குக் கரை ரயில் பாதை சேவை: டிசம்பர் 2026ஆம் ஆண்டு தொடங்கும்
August 14, 2026, 5:31 pm
திரெங்கானு அரசவையை அவமதித்ததாக ஆடவருக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை
August 14, 2026, 9:34 am
போதைப்பொருள் கடத்தில் ஈடுப்பட்ட விமானி வழக்கு: விசாரிக்க மலேசியாவிற்கு அனுமதி: சைபுடின்
August 13, 2026, 6:05 pm
சிங்கப்பூர் குப்பைகளை ஜொகூரில் கொட்டிய 9 நிறுவனங்களிடம் விசாரணை
August 13, 2026, 4:06 pm
