நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிலநடுக்கம்; கொலம்பியாவில் பதிவு செய்துள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா

புத்ராஜெயா:

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு பதிவுசெய்யப்பட்ட அனைத்து மலேசியக் குடிமக்களும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர்.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) தெரிவித்துள்ளது.

தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதுடன், இந்தச் சூழ்நிலையின் வளர்ச்சியைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, தேவைப்பட்டால் மேலதிக தகவல்களை வழங்கும். 

மேலும், இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட கொலம்பியா குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது அனுதாபத்தையும் வெளியுறவு அமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset