நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஶ்ரீ அன்வாரை அமிரூடின் சந்தித்தார்; மலாக்கா மாநிலத் தேர்தல் குறித்து எனக்கு தெரிவிக்கப்படவில்லை: ஃபஹ்மி

புத்ராஜெயா:

மலாக்கா மாநிலத் தேர்தலில் கூட்டணிக்கும் தேசிய முன்னணிக்கும் இடையே சாத்தியமான ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்காக, கூட்டணியின் தேர்தல் இயக்குநர் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி நேற்று நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்தித்தார்.

நம்பிக்கை கூட்டணி தகவல் தொடர்பு இயக்குனர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை உறுதிப்படுத்தினார்.

நேற்றைய சந்திப்பு குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டவில்லை. ஆனால் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் பற்றி தனக்கு விளக்கப்படவில்லை.

நேற்று அவர்கள் ஒரு கூட்டத்தை நடத்தியதாக நான் அறிகிறேன். ஆனால் அதில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது எனக்குத் தெரிவிக்கப்படவில்லை.

அடுத்த ஓரிரு நாட்களில் தலைமைத்துவத்திற்கான ஒரு கூட்டம் நிச்சயமாக உள்ளது. பல கூட்டங்கள், கூட்டங்கள் உள்ளன.

ஆனால் அது விவாதிக்கப்படும் தலைப்புகளில் ஒன்றா என்பது எனக்குத் தெரிவிக்கப்படவில்லை, என்று அவர் இன்று புத்ராஜயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை, மலாக்கா தேர்தலுக்காக தேசிய முன்னணியுடன் சாத்தியமான ஒத்துழைப்பு குறித்து கூட்டணியின் தேர்தல் குழு விவாதிக்கும் என்று அன்வர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset