
செய்திகள் இந்தியா
யோகியை பாஜகவை வீட்டுக்கு அனுப்பி விட்டது: அகிலேஷ் விமர்சனம்
லக்னோ:
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவருடைய சொந்த தொகுதியான கோரக்பூரில் பாஜக களமிறக்கியுள்ளதால், அவரை பாஜக முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பிவிட்டது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, அவருடைய சொந்த ஊரான கோரக்பூரில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டு முதல் கடந்த 2017இல் மாநில முதல்வராக அவர் பொறுப்பேற்கும் வரை கோரக்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அவர் இருந்துள்ளார்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் யோகி ஆதித்யநாத் மதுரா தொகுதியில் போட்டியிடுவார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பிரயாக்ராஜ், அயோத்தி அல்லது தியோபந்திலிருந்து போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. தற்போது, அவர் அவருடைய சொந்த தொகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளார்.
அதன் மூலம் அவரை பாஜக முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் லக்னோவுக்கு திரும்பிவர இனி தேவையிருக்காது என்பதால், அவர் கோரக்பூரிலேயே இருந்துவிடலாம் என எண்ணுகிறேன். அவருக்கு வாழ்த்துகள் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
October 23, 2025, 8:10 am
பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு
October 22, 2025, 10:16 pm
ஆர்எஸ்எஸ் - பாஜக முக்கியத்துவம் பெற்றால் கேரளம் என்னாகும்?: முதல்வர் பினராயி விஜயன் கேள்வி
October 22, 2025, 10:09 pm
வேட்பாளர்களை மிரட்டுகிறது பாஜக: பிரசாந்த் கிஷோர்
October 22, 2025, 10:04 pm
தீபாவளி போனஸ் தராததால் சுங்கச்சாவடியை திறந்துவிட்ட ஊழியர்கள்
October 21, 2025, 10:18 pm
இந்துக்கள் அல்லாதவர்கள் வீட்டுக்கு சென்றால் காலை உடையுங்கள்: பிரக்யா தாக்குர்
October 20, 2025, 9:47 pm
ரயில் நிலையத்தில் ஜி பே செயல்படாததால் வாட்சை பறித்துக்கொண்ட சமோசா விற்ற நபர்: வீடியோ வைரலானதால் கைது
October 20, 2025, 10:40 am
தீபாவளி பண்டிகைக்காக அயோத்தியில் 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை
October 19, 2025, 6:54 pm
தீபாவளி சொகுசுப் பலகாரம்: ஒரு கிலோ RM5330
October 18, 2025, 7:29 pm