
செய்திகள் இந்தியா
யோகியை பாஜகவை வீட்டுக்கு அனுப்பி விட்டது: அகிலேஷ் விமர்சனம்
லக்னோ:
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவருடைய சொந்த தொகுதியான கோரக்பூரில் பாஜக களமிறக்கியுள்ளதால், அவரை பாஜக முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பிவிட்டது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, அவருடைய சொந்த ஊரான கோரக்பூரில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டு முதல் கடந்த 2017இல் மாநில முதல்வராக அவர் பொறுப்பேற்கும் வரை கோரக்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அவர் இருந்துள்ளார்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் யோகி ஆதித்யநாத் மதுரா தொகுதியில் போட்டியிடுவார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பிரயாக்ராஜ், அயோத்தி அல்லது தியோபந்திலிருந்து போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. தற்போது, அவர் அவருடைய சொந்த தொகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளார்.
அதன் மூலம் அவரை பாஜக முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் லக்னோவுக்கு திரும்பிவர இனி தேவையிருக்காது என்பதால், அவர் கோரக்பூரிலேயே இருந்துவிடலாம் என எண்ணுகிறேன். அவருக்கு வாழ்த்துகள் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
May 23, 2022, 8:12 pm
டெல்லிக்கு புறப்படவிருந்த நான்கு சென்னை விமானங்கள் ரத்து
May 22, 2022, 1:42 pm
முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பேச்சு: கேரள அரசியல் தலைவருக்கு ஜாமீன் மறுப்பு
May 22, 2022, 12:26 pm
பாகிஸ்தானைப் போல் இந்தியாவில் மாநிலங்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன: ராகுல்
May 22, 2022, 12:04 pm
பொது மக்களின் எதிர்ப்புக்கு பணிந்தது இந்திய அரசு: பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது
May 22, 2022, 11:54 am
ம.பி.: உன் பெயர் முஹம்மதா என கேட்டு வயதானவரை அடித்து கொன்ற பாஜக நிர்வாகி
May 21, 2022, 5:52 pm
ஞானவாபி வழக்கை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு
May 21, 2022, 4:28 pm
ரயில்வே துறையில் வேலைக்காக லஞ்சமாக நிலம்: லாலு பிரசாத் மீது சிபிஐ புதிய பதிவு
May 21, 2022, 4:08 pm
எங்களுக்கு மன்னிக்கும் மாண்பைக் கற்றுக்கொடுத்தவர் என் தந்தை: ராகுல் காந்தி உருக்கம்
May 21, 2022, 3:04 pm