செய்திகள் இந்தியா
யோகியை பாஜகவை வீட்டுக்கு அனுப்பி விட்டது: அகிலேஷ் விமர்சனம்
லக்னோ:
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவருடைய சொந்த தொகுதியான கோரக்பூரில் பாஜக களமிறக்கியுள்ளதால், அவரை பாஜக முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பிவிட்டது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, அவருடைய சொந்த ஊரான கோரக்பூரில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டு முதல் கடந்த 2017இல் மாநில முதல்வராக அவர் பொறுப்பேற்கும் வரை கோரக்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அவர் இருந்துள்ளார்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் யோகி ஆதித்யநாத் மதுரா தொகுதியில் போட்டியிடுவார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பிரயாக்ராஜ், அயோத்தி அல்லது தியோபந்திலிருந்து போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. தற்போது, அவர் அவருடைய சொந்த தொகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளார்.
அதன் மூலம் அவரை பாஜக முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் லக்னோவுக்கு திரும்பிவர இனி தேவையிருக்காது என்பதால், அவர் கோரக்பூரிலேயே இருந்துவிடலாம் என எண்ணுகிறேன். அவருக்கு வாழ்த்துகள் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
April 23, 2024, 4:43 pm
பெரும் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது: ஆம் ஆத்மி
April 23, 2024, 4:38 pm
மேற்கு வங்கத்தில் 25,753 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து
April 23, 2024, 8:35 am
முஸ்லிம்கள் குறித்து மோடியின் இனத்துவேஷ பேச்சு: காங்கிரஸ் கட்சி தோ்தல் ஆணையத்தில் புகாா்
April 22, 2024, 9:23 am
இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்: ப.சிதம்பரம்
April 21, 2024, 2:41 pm
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் செய்தி: யூடியூப் சேனல் மீது வழக்கு
April 21, 2024, 2:18 pm
வாக்களித்தால் குடிநீர்: கர்நாடக துணை முதல்வர் மீது வழக்கு
April 20, 2024, 8:44 pm
இஸ்ரேல், துபாய், தெஹ்ரான் விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா
April 19, 2024, 1:28 pm
பாஜக தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் என குறிப்பிடப்பட்டவில்லை: அசாதுதீன் ஓவைசி
April 19, 2024, 1:04 pm
சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலில் இருந்து கேரளம் திரும்பிய பெண் மாலுமி
April 19, 2024, 11:10 am