நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் தீவிரமடையும் புகைமூட்டம்: சரவாக் மாநிலத்தில் 11 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு 

பெட்டாலிங் ஜெயா: 

நாட்டில் புகைமூட்டம் சம்பவங்கள் தீவிரமடைந்துள்ளன. அவ்வகையில் சரவாக் மாநிலத்தில் 11 இடங்களும் தீபகற்பத்தில் ஓர் இடமும் கடுமையான புகை மூட்டத்திற்கு ஆளாகியுள்ளன 

செரியான் பகுதி மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் 189ஆக காற்றின் தரம் உள்ளது. 

கூச்சிங், பிந்துலு, ஶ்ரீ அமான், மீரி, ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் 100க்கும் மேல் பதிவாகி ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது. 

தீபகற்ப மலேசியாவில் ஓர் இடம் மட்டுமே மோசமான சூழலை கொண்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தின் ஜொஹான் செத்தியாவில் காற்றின் தர குறியீடு 156ஆக  பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது ஆரோக்கியமற்ற சூழலை எடுத்து காட்டுகிறது என்று சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட IPU வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset