செய்திகள் மலேசியா
பண்டான் இண்டாவில் 14 வயது இளம் பெண் மாயம்: போலிஸ் தகவல்
அம்பாங்:
கடந்த வெள்ளிக்கிழமை பண்டான் இண்டா வர்த்தக மையத்தில் உள்ள ஶ்ரீ மாயாங் அடுக்குமாடியில் 14 வயது இளம் பெண் ஒருவர் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பெண்ணைக் கண்டுப்பிடிக்க போலிஸ் தரப்பு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
அந்த இளம்பெண் டியா ஸாராவியெட்டா என்றும் அவருக்கு வயது 14 என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இளம் பெண் காணாமல்போனதாக ஆகஸட் 7ஆம் தேதி தங்கள் தரப்புக்குப் புகார் ஒன்று கிடைத்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் துணை கமிஷ்னர் கைருல் அனுவார் காலிட் கூறினார்.
"இருப்பினும், காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்படுவதற்கு முன்பே, பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடிப்பதற்கான குடும்பத்தினரின் முயற்சிகள் தோல்வியடைந்தன," என்று அவர் இன்று ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்
மேலும், அந்த இளம் வயதினரின் கடைசி இருப்பிடம், அம்பாங்கில் உள்ள பாண்டன் இந்தா வணிகப் பூங்காவில் அமைந்துள்ள ஸ்ரீ மாயாங் அடுக்குமாடிக் குடியிருப்பு எனக் கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2026, 4:52 pm
சிலாங்கூர் மாநில சுக்மா விளையாட்டு போட்டி: கூட்டரசு அரசின் நிதியுதவி இல்லாமல் நடத்த முடியும்
August 8, 2026, 4:49 pm
சரவாக் மாநில பொதுச்சேவை ஊழியர்களுக்கு இரண்டு மாத போனஸ் அறிவிப்பு
August 8, 2026, 3:16 pm
ஆடியோ தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேர் குறித்து ஐஜிபி, சைபுடின் விளக்கமளிக்க வேண்டும்: ராயர்
August 8, 2026, 3:14 pm
மலாக்கா மாநிலத் தேர்தல் இடங்கள் ஒதுக்கீடு; பேச்சுவார்த்தை மேசையில் இறுதி செய்யப்படும்: அஷ்ராப்
August 8, 2026, 3:13 pm
தாபோங் ஹாஜி அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை: முழுமையான விசாரணைக்கு உட்படுத்த மாமன்னர் உத்தரவு
August 8, 2026, 1:48 pm
கிள்ளான் உத்தாமா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் மஹிமாவில் உறுப்பினராக பதிவு பெற்றது
August 8, 2026, 1:10 pm
