நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூச்சோங் 14 ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் இலவச மருத்துவ முகாம்; சமூக கடப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்படுகிறது: டத்தோ சிவம்

பூச்சோங்:

பூச்சோங் 14 ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் இலவச மருத்துவ முகாம் சமூக கடப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.

பூச்சோங் 14ஆவது மைல் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் தலைவர் டத்தோ டாக்டர் ஏ.பி. சிவம் இதனை கூறினார்.


இந்த இலவச மருத்துவ முகாமில் பல் உட்பட15 பரிசோதனைகள் மக்களுக்காக நடத்தப்படுகிறது.


பூச்சோங் நாடாளுமன்ற சேவை மையம்,
பெட்டாலிங் மாவட்ட சுகாதாரத் துறை, பெட்டாலிங் மாவட்ட பல் சுகாதார துறை,
செர்டாங் மருத்துவமனை வருகையாளர்கள் குழு ஆகியவற்றுடன் இணைந்து இம்மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

ஆலய தரப்பினருடன் மட்டுமல்லாமல் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து இலவச உடல்நல கருத்தரங்குகள், சுகாதார முகப்புகள் யாவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் நோய் தொடர்பான மேலதிக விபரங்களையும் தகவல்களையும் பெற்றுக் கொள்ள வாய்ப்புகள் கிடைத்தது என்று டத்தோ ஏபி சிவம் கூறினார்.

பொதுமக்கள் குறிப்பாக இந்தியர்கள் தங்களின் உடல்நலம் மீது அதீத அக்கறை கொள்ளாமல் இருப்பது பெரும் வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதில் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இதனை களையும் பொருட்டு இம்மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆலய நிர்வாகங்கள் சமய வழிபாடுகளை மட்டும் கவனம் செலுத்தாமல் இது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

சமூக கடப்பாட்டின் அடிப்படையில் நடைபெறும் இது போன்ற நிகழ்வுகள் மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று டத்தோ சிவம் கூறினார்.

இதனிடையே இந்த மருத்துவ முகாமில் சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் ஜமாலியா, பூச்சோங் 14 மைல் சுகாதார மையத்தின் பல் மருத்துவ பிரிவு சுகாதார அதிகாரி டாக்டர் மஞ்ஜித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset