நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமரின் சிறப்பு நிதி ஒதுக்கீடு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அல்ல: டத்தோஶ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் விளக்கம் 

கோலாலம்பூர்: 

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு நிதி ஒதுக்கீடு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அல்ல; மாறாக அது மக்களுக்குச் சென்று சேர வேண்டியது என்று தொடர்பு அமைச்சர் டத்தோஶ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார். 

மலேசியத் திட்டம் மற்றும் வரவு செலவுத் திட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, MyKHAS என்பது பிரதமரிடமிருந்து வழங்கப்படும் ஒரு சிறப்பு ஒதுக்கீடாகும், அதன் விநியோக முறையை அவரே தீர்மானிக்கிறார்.

சிறப்பு நிதி ஒதுக்கீடு என்பது பிரதமரின் முடிவை பொறுத்தே அமைந்தது. ஆக, நிதி எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பது குறித்து அவரே முடிவு செய்வார் என்று அவர் சொன்னார். 

கடந்த ஆகஸ்ட் 5 அன்று, அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில், ஜூலை 29 முதல் தனது தொகுதி MyKHAS அமைப்பை அணுகுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் சமூக உதவிகள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset