நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் மாநிலத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் காற்றின் தரக்குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு 

கூச்சிங்: 

இந்தோனேசியாவின் கலிமந்தான்  பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ மற்றும் நிலத்தீ காரணமாகச் சரவாக் மாநிலத்தின் பல பகுதிகளில் புகைமூட்டம் மேலும் மோசமடைந்துள்ளது.

அங்குள்ள ஐந்து மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 8 மணி நிலவரப்படி, செரியான் பகுதியில் அதிகபட்சமாக 171 காற்று மாசுபடுத்தும் குறியீட்டு  பதிவாகியுள்ளதாகச் சுற்றுச்சூழல் துறை  தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கூச்சிங் (154), சமரஹான் (154), ஸ்ரீ அமான் (139) மற்றும் பிந்துளு (124) ஆகிய மாவட்டங்களிலும் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது.

புகைமூட்டம் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset