நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய பாதுகாப்பு விவகாரம்: அமைச்சரவை இரண்டு வாரங்களுக்குள் விரிவான திட்டத்தைச் சமர்ப்பிக்க உத்தரவு 

கோலாலம்பூர்: 

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பாதுகாப்பு, கட்டுப்பாடுகளை மேம்படுத்துவதற்காக விரிவான திட்டம் ஒன்றை இரு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உள்துறை அமைச்சுக்கும் போக்குவரத்து அமைச்சுக்கும் அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது. 

நாட்டின் நற்பெயரைக் குலைக்கும் வகையிலும், விமான நிலைய பாதுகாப்பு அமைப்பில் பலவீனங்கள் இருப்பதாகத் தோற்றுவிக்கும் வகையிலும் அண்மையில் நடைபெற்ற சம்பவங்கள் அரசாங்கத்திற்கு கவலை அளித்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்

பல்வேறு தொடர்புடைய முகமைகளை உள்ளடக்கிய மேம்பாட்டுத் திட்டம் உடனடியாக வகுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னதாக இந்தோனேசியாவில் மலேசியா நாட்டு விமானி ஒருவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டன

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset