நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்

புதுடெல்லி:

பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு தில்லியில் சனிக்கிழமை செப்.12ஆம் தேதி புது டெல்லியில்  தொடங்குகிறது. இதில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் பங்கேற்கவுள்ளனா்.

உலகின் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றாக கருதப்படும் பிரிக்ஸ் அமைப்பில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. 

இந்த அமைப்பின் நட்பு நாடுகளாக பெலாரஸ், பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியத்நாம் ஆகியவை உள்ளன.

உலகின் முக்கிய 11 பெரிய பொருளாதார சக்திமிக்க நாடுகள் பிரிக்ஸில் அங்கம் வகிக்கின்றன. உலகின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் பிரிக்ஸ் நாடுகள் 40 சதவீதம் கொண்டுள்ளன. உலக வா்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு 26 சதவீதம் ஆகும்.

இந்த அமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset