நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில தேர்தல்: மதியம் 1 மணிவரை 44.67 விழுக்காட்டினர் அல்லது 384,096 பேர் வாக்களிப்பு 

சிரம்பான்:

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணிவரை 44.67 விழுக்காட்டினர் அல்லது 384,096 பேர் வாக்களித்துள்ளனர். 

இந்த தகவலை மலேசியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது

காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை நெகிரி செம்பிலான் மாநில மக்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.

இந்த தேர்தலில் 103 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். மொத்தம் 36 சட்டமன்ற இடங்களுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

நெகிரி செம்பிலான் மாநில  சட்டமன்ற தேர்தலின் முடிவு இன்று இரவு வேளையில் தெரிய வரும் என்று மலேசியத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset