நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஜூலை 31ஆம் தேதி முதல் கோழி இறைச்சிகள் விற்கப்படாது: தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு 

சென்னை: 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜூலை 31ஆம் தேதி முதல் கடைகளில் கோழி விற்பனை செய்யப்படாது என்று தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

கோழிகளுக்கு கடைசி நிமிடம் வரை தீவனம் கொடுப்பதால் அவற்றின் உடலில் தீவனம் தங்கி ஜீரணமாகாமல் அப்படியே இருக்கிறது 

இதனால் கோழி வாங்குபவர்களுக்கு கூடுதல் எடையுடன் கோழிகள் விற்பனை செய்யப்படுகின்றன. 

தீவனம் ஜீரணிக்காமல் கழிவுகள் வெளியேறுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. மேலும் இறைச்சின் தன்மையுடன் தரமும் பாதிக்க செய்கிறது. 

தொடர்ந்து கோழி உற்பத்தியாளர்கள் 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்தும் நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அந்த கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. 

இதனை வலியுறுத்தி தற்போது இந்த விற்பனை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

கோழி இறைச்சி கிடைப்பதில் தற்காலிக தட்டுப்பாடு அல்லது விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset