செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழக-கர்நாடக எல்லையில் பதற்றம்: ஓசூர் எல்லையில் தமிழகப் பேருந்துகள் நிறுத்தம்
ஓசூர்:
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் உடனடியாக அணை கட்ட கர்நாடக அரசை வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தை கண்டித்தும் கன்னட ஜாக்கிருதி வேதிகே என்கிற அமைப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் சாலை மறியல் போராட்டத்துக்குகு அழைப்பு விடுத்துள்ளது.
இதன் காரணமாகத் தமிழக-கர்நாடக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் போராட்டம் மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருஷ்ணகிரி காவல் துறை மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தருமபுரி மண்டல அறிவுறுத்தலின்படி, இன்று அதிகாலை 4 மணி முதல் பெங்களூரு செல்லும் அனைத்து தமிழக அரசுப் பேருந்துகளும் ஓசூர் எல்லையோடு நிறுத்தப்பட்டுள்ளன.
மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில எல்லையில் கன்னட அமைப்பினர் மறியல் போராட்டம் அறிவித்துள்ளதால் தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.
மறுஉத்தரவு வரும் வரையிலும், போராட்டம் முடியும் வரையிலும் தமிழகப் பேருந்துகள் கர்நாடகாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி, அத்திப்பள்ளி பகுதிகளில் இரு மாநில போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2026, 2:57 pm
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்
July 25, 2026, 2:53 pm
“என்னிடமிருந்து மைக்கை பறிப்பதுதான் ஜனநாயகமா?” - நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்
July 23, 2026, 7:33 am
இந்திய அஞ்சல் துறை பெயரில் நூதன சைபர் மோசடி: பொதுமக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை
July 21, 2026, 4:59 pm
உயிரி-எரிவாயு ஆலையில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்
July 20, 2026, 3:08 pm
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ கைது
July 19, 2026, 6:30 pm
10 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
July 16, 2026, 3:09 pm
