நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இந்திய அஞ்சல் துறை பெயரில் நூதன சைபர் மோசடி: பொதுமக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை

சென்னை: 

இந்​திய அஞ்​சல் துறை பெயரில் புதிய வகை நூதனமான சைபர் மோசடி அரங்​கேறி வரு​வ​தாக பொது​மக்​களுக்கு சிபிஐ எச்சரிக்கை விடுத்​துள்​ளது.

இதுகுறித்து சிபிஐ-​யின் அதி​காரப்​பூர்வ எக்ஸ் தள பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது:

சைபர் குற்​ற​வாளி​கள் பொது​மக்​களின் செல்​போன் எண்​களுக்கு எஸ்​எம்​எஸ் (குறுஞ்​செய்​தி) அல்​லது வாட்​ஸ் அப் மூலம் ஒரு குறுஞ்​செய்தியை அனுப்​பு​கிறார்​கள். அதில், “உங்​களு​டைய பார்​சல் முகவரி சரி​யாக இல்​லாத​தால் டெலிவரி செய்ய முடியவில்லை. அதை மீண்​டும் டெலிவரி செய்ய சிறிய தொகையை ஆன்​லைனில் செலுத்​த​வும்” என்று ஒரு லிங்க்​உடன் செய்தி வரும்.

அதை கிளிக் செய்​தால், அது அஞ்​சல் துறை​யின் அதி​காரப்​பூர்வ இணை​யதளம் போன்றே அச்சு அசலாக வடிவ​மைக்​கப்​பட்ட ஒரு போலி இணை​யதளத்​துக்கு உங்​களை அழைத்​துச் செல்​லும். அங்கே நீங்​கள் உங்​கள் வங்கி விவரங்​கள் அல்​லது டெபிட் மற்​றும் கிரெடிட் கார்டு தகவல்​களை உள்​ளிடும்​போது, அந்​தத் தகவல்​களைத் திருடும் மோசடி கும்​பல், உங்​கள் வங்கி கணக்​கில் உள்ள மொத்​தப் பணத்​தை​யும் சில நிமிடங்​களில் சுருட்​டி​விடும் அபா​யம் உள்​ளது.

எனவே, இந்த மோசடி​யில் இருந்து பொது​மக்​கள் தங்​களைப் பாது​காத்​துக் கொள்ள வேண்​டு​மா​னால், முன்​பின் தெரி​யாத எண்​களில் இருந்து வரும் எஸ்​எம்​எஸ் அல்​லது வாட்​ஸ்​அப் லிங்​கு​களை ஒரு​போதும் கிளிக் செய்ய வேண்​டாம். உங்​கள் பார்​சல் குறித்த தகவல்​களை அறிய www.indiapost.gov.in என்ற அதி​காரப்​பூர்வ இணை​யதளத்தை மட்​டுமே பயன்​படுத்த வேண்​டும். உங்​கள் வங்கி கணக்கு விவரங்​கள், ஏடிஎம் பின், ஓடிபி அல்​லது கடவுச்​சொற்​களை யாருட​னும் பகிரக்​கூ​டாது.

ஏதேனும் சந்​தேகத்​துக்​குரிய குறுஞ்​செய்தி வந்​தால், தாம​திக்​காமல் உடனடி​யாக சைபர் குற்​றப்​பிரிவு உதவி எண் 1930 அல்​லது இணை​யதள முகவரி  http://www.cybercrime.gov.in -இல் புகார் அளிக்​கலாம்​.

இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset