செய்திகள் தமிழ் தொடர்புகள்
“என்னிடமிருந்து மைக்கை பறிப்பதுதான் ஜனநாயகமா?” - நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்
சென்னை:
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் நான் பேசிக்கொண்டிருந்த போது மைக்கை பறிப்பதுதான் ஜனநாயகமா? என்று நடிகை சனம் ஷெட்டி கேள்வி எழுப்பி உள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நடிகை சனம் ஷெட்டி கலந்து கொண்டு பேசினார்.
“இது மாணவர்களுக்காக மாணவர்கள் நடத்தும் போராட்டம். பொது மக்களில் ஒருவராக இதில் நான் பங்கேற்கிறேன். இது மாணவர்களின் போராட்டம். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.
இந்த மேடையை அரசியல் சார்ந்து பயன்படுத்துபவர்கள் தான் கோமாளிகள். நாம் கிடையாது. நான் தளபதியின் (விஜய்) தீவிர ரசிகர். நேற்றுதான் முதல் நாள் முதல் காட்சி பார்த்திருந்தேன். அப்போது அவரது பேச்சுக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குரல் எழுப்பினர். இருப்பினும் தொடர்ந்து சனம் ஷெட்டி பேசினார்.
இது ஜனநாயகம் அல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது. இப்போது புரிகிறதா நான் யார் குறித்து பேசினேன் என்று. மாணவர்களுக்காக நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க நான் வந்துள்ளேன். யாரும் சொல்லி இங்கு நான் வரவில்லை. நானாகவே வந்துள்ளேன்” என்று ஆவேசமாக நடிகை சனம் ஷெட்டி பேசினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2026, 2:57 pm
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்
July 23, 2026, 7:33 am
இந்திய அஞ்சல் துறை பெயரில் நூதன சைபர் மோசடி: பொதுமக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை
July 21, 2026, 4:59 pm
உயிரி-எரிவாயு ஆலையில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்
July 20, 2026, 3:08 pm
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ கைது
July 19, 2026, 6:30 pm
10 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
July 16, 2026, 3:09 pm
தவறு செய்தால் அமைச்சர் பதவி உடனடியாக பறிக்கப்படும்: முதல்வர் விஜய் எச்சரிக்கை
July 16, 2026, 12:57 pm
