நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சமூக ஊடகங்களில் என்னைப்பற்றி அவதூறு பிரச்சாரம்: சென்னை மேயா் ஆா்.பிரியா போலீஸில் புகாா்

சென்னை:

சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை தெரிவிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மேயா் ஆா்.பிரியா, போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம் ஒரு புகாா் அளித்துள்ளாா். அதில், சமூக ஊடகங்களில் தன்னை குறித்து அவதூறான தகவல்கள் பதிவிடப்படுவதாகவும், இதனால் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளாா்.

மேலும், சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் அதிகாரபூா்வ தொலைபேசி எண்ணுக்கும் அடையாளம் தெரியாத நபா்கள் தொடா்புகொண்டு தொந்தரவு அளித்து வருவதாகவும், இதனால் அலுவலகப் பணிகளும் பாதிக்கப்படுவதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளாா்.

புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சைபா் குற்றப்பிரிவுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளாா். சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset