நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: எதிரணியின் பிரச்சாரப் பொருட்களை மதிக்கவும், சேதப்படுத்த வேண்டாம்: முஹம்மத் ஹசான்

ரந்தாவ்:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரக் காலம் முழுவதும், எதிரணியின் பிரச்சாரப் பொருட்களைத் தொந்தரவு செய்யவோ அல்லது சேதப்படுத்தவோ கூடாது.

நெகிரி செம்பிலான் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் கட்சி ஆதரவாளர்களுக்கு இதனை நினைவூட்டினார்.
பல பகுதிகளில் பிரச்சாரப் பொருட்களுக்கு எதிரான நாசவேலைச் சம்பவங்கள் குறித்து அதிகாரிகளிடமிருந்து பல அறிக்கைகள் வந்துள்ளது.

ரந்தாவில் மட்டுமல்ல, நெகிரி செம்பிலானின் பல பகுதிகளிலும் பிரச்சாரப் பொருட்கள், கொடிகள், சுவரொட்டிகள், பதாகைகள் சேதப்படுத்தப்படுவதாக போலிஸ், தேர்தல் ஆணையத்திடமிருந்து எனக்கு பல புகார்கள் வந்துள்ளன.

எதிர்க்கட்சி மட்டுமல்ல, தேசிய முன்னணியில் பெருமளவில் நாசவேலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு இங்குள்ள ரந்தாவில் உள்ள பண்டார் ஏகர் வாக்கு மாவட்ட மைய நிகழ்ச்சியில் பேசும்போது  அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset