நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தவறு செய்தால் அமைச்சர் பதவி உடனடியாக பறிக்கப்படும்: முதல்வர் விஜய் எச்சரிக்கை

சென்னை:

அமைச்சர்கள் யாரேனும் தவறு செய்தால், தவறு நடந்தது தெரிய வந்தால், அமைச்சர் பதவி உடனடியாக பறிக்கப்படும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜோசப் விஜய் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர்கள் பங்கேற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

கடந்த சில வாரங்களாக அமைச்சர்கள் அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு செய்வதாகக் கூறி விடியோ எடுத்து வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, அது மக்களிடைய பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

அமைச்சர்கள் சிலரின் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கும் அதிருப்தி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் இன்று அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நேரடியாகவே முதல்வர் விஜய் இது குறித்து தன்னுடைய கருத்தினை தெரிவித்திருப்பதாகவும், அமைச்சர்களுக்கு பதவி பறிக்கப்படும் என்று அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset