நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போவில் புதர் நிறைந்த பகுதியில் இரண்டு இந்திய இளம் பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன

ஈப்போ:

ஈப்போவில் புதர் நிறைந்த பகுதியில் இரண்டு இந்திய இளம் பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த சம்பவம் இன்று மாலை இங்குள்ள புந்தோங்கில் உள்ள சுங்கை பாரி அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதிக்கு அருகில் நிகழ்ந்தது.

சம்பந்தப்பட்ட இரண்டு இந்திய இளம் பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் உள்ளூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சுமார் 14, 15 வயதுடையவர்கள் என நம்பப்படும் பாதிக்கப்பட்டவர்கள், பள்ளி மாணவிகள் என்று கருதப்படுகிறது.

சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட உடனேயே, போலிஸ் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் அமைந்துள்ள 15 மாடிக் கட்டிடம், ஈப்போ நகர சபையின் மேற்பார்வையின் கீழ் உள்ளது எனத் தெரிய வந்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு அதன் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு, அந்தக் கட்டிடம் நீண்ட காலமாக ஆளில்லாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.

அதே நேரத்தில் கைவிடப்பட்ட அந்தக் கட்டிடத்தில் அந்த இரண்டு இளம் பெண்கள் எப்படி இருந்தார்கள்.

மரணத்திற்கான காரணம், இந்தச் சம்பவத்தில் வேறு நபர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலிஸ் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்த செய்தி விரைவாகப் பரவியதால், புந்தோங், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சம்பவ இடத்திற்குத் திரண்டு வந்து பீதியை ஏற்படுத்தினர்.

உயிரிழந்த இருவரும் புன்டாங் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டாலும், அவர்களின் உண்மையான அடையாளங்களும் மரணத்திற்கான காரணமும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக ஈப்போவில் உள்ள ராஜா பெர்மைசூரி பைனூன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset