நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

BN- PN கூட்டணி வெற்றிப்பெற்றால் 16ஆவது பொதுத்தேர்தல் வரை நீடிக்கும்: அந்தோனி லோக் தகவல் 

பெட்டாலிங் ஜெயா- 

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் BN-PN கூட்டணி வெற்றிப்பெற்றால் அந்த கூட்டணி எதிர்வரும் 16ஆவது பொதுத்தேர்தல் வரை நீடிக்கும் என்று DAP கட்சியின் பொதுச்செயலாளர் அந்தோனி லோக் கூறினார். 

நம்பிக்கை கூட்டணியைத் தோற்கடிக்க இந்த இரு அரசியல் கூட்டணிகள் இணைந்து இந்த தேர்தலைச் சந்திக்கின்றன 

இரு கூட்டணி இணைந்து தேர்தலை சந்திப்பதால் வெற்றியா தோல்வியா என்பதை மதிப்பிடும் களமாக இந்த நெகிரி செம்பிலான் மாநில தேர்தல் விளங்குகிறது. 

நம்பிக்கை கூட்டணியால் தேர்தலில் வெற்றிப்பெற முடியும் என்பதையும் லோக் திட்டவட்டமாக சொன்னார். 

இந்த இரு PN - BN கூட்டணிகளும் முறையே 25 சட்டமன்றம் மற்றும் 11 சட்டமன்றங்களில் போட்டியிடுகின்றன 

மத்திய அரசாங்க ரீதியில் நம்பிக்கை கூட்டணி - தேசிய முன்னணி இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ளனர். தேசிய கூட்டணி எதிர்கட்சியாக உள்ளது.

-மவித்திரன் 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset