செய்திகள் உலகம்
மலேசியாவுக்கு உதவ சிங்கப்பூர் தயாராக உள்ளது: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர்
சிங்கப்பூர்:
அண்மைய வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மலேசியாவுக்கு மேற்கொண்டு உதவ காத்திருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவுக்கு தேவைப்படும் பட்சத்தில் சிங்கப்பூர் உதவிக்கரம் நீட்டும் என நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மலேசியாவுக்கு உதவும் வகையில் சிங்கப்பூர் அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொண்டதா என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு, "இந்தக் கடினமான வேளையில் சிங்கப்பூர், மலேசியாவுக்கு உறுதியுடன் துணை நிற்கிறது," என விவியன் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
"வெள்ளப்பெருக்கு தொடர்பாக மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதின் அப்துல்லாவுக்கு 2021, டிசம்பர் மாதம் தாம் கடிதம் எழுதியதாகவும், அதில் வெள்ளப் பாதிப்பு தொடர்பாக சிங்கப்பூரின் அனுதாபத்தை தெரிவித்ததாகவும் குறிப்பிட்ட அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், அதே கடிதத்தில் சிங்கப்பூர் எத்தகைய உதவியையும் செய்யத் தயாராக உள்ளதைக் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், மலேசியா, பிலிப்ஃபீன்ஸில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் திரட்டிய நிதிக்கு, சிங்கப்பூர் அரசு 251,160 ரிங்கிட் வழங்கி உள்ளதாகவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் மலேசியா ஒரு நூற்றாண்டில் சந்தித்திராத பெருமழையையும் வெள்ளப்பெருக்கையும் எதிர்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am
இலங்கையின் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஈரான் துணை நிற்கும்: ஈரான் அதிபர் வாக்குறுதி
April 24, 2024, 12:20 pm
உக்ரைனில் உள்ள கார்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகர்ப்பு
April 24, 2024, 10:33 am
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இன்னும் சில வாரங்களில் வெளியேற்றப்படுவர்: ரிஷி சுனக்
April 24, 2024, 10:30 am
காசா வடக்கு எல்லையில் வசிப்பவர்கள் உடனே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
April 23, 2024, 6:02 pm
பாகிஸ்தானில் ஈரான் அதிபர்
April 23, 2024, 10:16 am
80க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்: நள்ளிரவில் குலுங்கிய தைவான்
April 22, 2024, 5:15 pm