நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா 

வாஷிங்டன்:

ரஷியாவுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்தால் இந்தியா, சீனாவுக்கு 500 சதவிகிதம் வரி விதிக்கும் புதிய மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது. 

ரஷியாவுடன் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் வர்த்தகத்தைத் தொடர்ந்தால், 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா முன்மொழியப்பட்டுள்ளதாக குடியரசுக் கட்சி எம்பி லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வந்த நிலையில், கடந்த சில நாள்களாக இந்தியா, சீனாவுடன் மிகச் சிறந்த வர்த்தகம் நடைபெறப் போகிறது என அமெரிக்கா கூறிவந்தது. இப்போது அந்த இரு நாடுகள் மீதும் 500 சதவிகிதம் வரை வரி விதிக்க புதிய மசோதா ஒன்றை முன்மொழிந்துள்ளது. இது இருநாடுகளுக்கும் பேரிடியாக வந்திறங்கியுள்ளது.

ரஷியாவை பொருளாதார ரீதியில் தாக்கும் விதமாக அமெரிக்க இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதா ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தள்ளுபடி விலையில் ரஷியாவிடம் கச்சா எண்ணெய்யை அதிகளவில் வாங்கக்கூடிய இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் அதிகளவில் பாதிக்கக்கூடும் என கருதப்படுகிறது.

இதுகுறித்து கிரஹாம் கூறுகையில், “ரஷியாவிடமிருந்து பொருள்களை வாங்கிக் கொண்டு, உக்ரைனுக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், இந்த வரிவிதிப்பை எதிர்கொள்ளக்கூடும். இந்தியாவும், சீனாவும் ரஷிய அதிபர் புதினிடமிருந்து 70 சதவிகிதம் அளவுக்கு கச்சா எண்ணெய்யை வாங்குகின்றன” என்றார்.

ஒருவேளை கச்சா எண்ணெய்யின் விலையேற்றம் மற்றும் 500 சதவிகித வரி விதிப்பு ஆகியவை இந்தியாவில் மருந்துகள், ஜவுளி, ஐடி சேவைகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.  

ரஷியாவிலிருந்து அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்துவந்த இந்தியா, சமீபத்திய ஆண்டுகளாக ரஷியாவிடமிருந்து கிட்டத்தட்ட 49 பில்லியன் யூரோ வரை கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்துள்ளது.  

குடியரசுக் கட்சியின் எம்பி கிரஹாம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் எம்பி ரிச்சர்ட் புளூமெண்ட் ஆகியோரால் முன்மொழியப்பட்டு வழங்கப்பட்ட இந்த மசோதாவுக்கு 84 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இந்த மசோதா சட்டமாக மாறினால், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கக் கூடும். மேலும், இது மற்றொரு வர்த்தகப் போருக்கான துவக்கமாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset