நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மெக்சிகோ நாட்டின் நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: 10 பேர் பலி 

மெக்சிகோ சிட்டி- 

வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாடு அமைந்துள்ளது. இங்கு நேற்று பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 

ஜலஸ்கோ மாகாணம் க்வாடலஜாரா நகருக்கும்  டிபிக் நகருக்கும் இடையே தேசிய நெடுஞ்சஐ ஒன்று உள்ளது. 

ஹொஸ்டோடிபாக்யூவா நகர் அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த சரக்கு லாரி எதிரே வந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பெரும் விபத்து ஏற்பட்டது 

இந்த பயங்கர சாலை விபத்தில் கார்கள், சரக்கு லாரி என பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. 

இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். 

மெக்சிகோ நாட்டில் நிகழ்ந்த பயங்கரமான சாலை விபத்து குறித்து போலிஸ் தரப்பு விசாரணை நடத்தி வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset