நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆஸ்திரேலியாவில் ஆண்களுக்கு எதிராக  இணையப் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு 

மெல்பேர்ன்:

ஆஸ்திரேலியாவில் ஆண்கள் பாலியல் இணையக் குற்றங்களுக்கு இலக்காவது அதிகரித்துவருகிறது.

ஆண்களிடமிருந்து பணத்தைப் பெற குற்றவாளிகள் பாலியல் ரீதியான படங்களைச் சமூக ஊடகங்களில் பரப்பப்போவதாக மிரட்டுகின்றனர்.

சென்ற ஆண்டு பிற்பாதியில் அத்தகைய சம்பவங்கள் குறித்து 2,200க்கும் அதிகமான புகார்கள் பதிவாகின.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்கள் மொத்தம் 803 புகார்களை அளித்தனர்.

15 வயதுக்கு உட்பட்ட இளையர்களும் பாதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் பெண்களைவிட ஆண்கள்தான் அதிகம் புகார் அளித்தனர்.

பாலியல் இணையக் குற்றங்கள் Instagram தளத்திலும் WhatsApp செயலியிலும் நடத்தப்படுகின்றன.

இளம் பயனீட்டாளர்களைப் பாதுகாக்கச் சமூக ஊடக நிறுவனங்கள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆஸ்திரேலியாவின் இணையப் பாதுகாப்புக் குழுத் தலைவர் கூறினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset