செய்திகள் உலகம்
பெங்கொக் இரவு கேளிக்கை மையத்தில் தீ விபத்து: 27 பேர் பலி
பெங்கொக்-
தாய்லாந்தின் பெங்கொக் நகரிலுள்ள இரவு கேளிக்கை மையத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தினால் பரிதாபமாக 27 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்
நள்ளிரவுக்குச் அவசர அழைப்பு வந்ததையடுத்து, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று தீயணைப்பு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தினர், ஆனால் அந்த வளாகம் கடுமையாகச் சேதமடைந்திருந்தது கண்டறியப்பட்டது.
சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள காணொளிகளில், கட்டிடத்தின் முன்பகுதியிலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறுவதும், பார்வையாளர்கள் பிரதான வாசல் வழியாகத் தப்பி ஓடுவதும் காணப்பட்டன.
இந்த தீ விபத்தில் பலர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.
சாட்டுசாக் மாவட்டத்தில் உள்ள பொழுதுபோக்கு மையம், அப்பகுதியில் உள்ள பிரபலமான பொழுதுபோக்கு மற்றும் உணவக இடங்களில் ஒன்றாகும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 11:11 am
வெனிசுவேலாவில் நிகழ்ந்த இரட்டை நிலநடுக்கங்கள்: பலி எண்ணிக்கை 6,301ஆக உயர்வு
August 10, 2026, 3:37 pm
பிரம்மாண்டமாக நடந்த சிங்கப்பூரின் 61ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
August 9, 2026, 4:24 pm
சிங்கப்பூர் தேசிய தின விருதுகள் 7,491 பேருக்கு வழங்கப்படுகின்றன
August 9, 2026, 1:21 pm
அமெரிக்க செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்: இந்திய பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்
August 6, 2026, 3:06 pm
இஸ்ரேல் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச் சடங்கு
August 6, 2026, 10:52 am
வகுப்பறையில் ஆசிரியர் முன் மாணவன் புகைப்பிடித்த சம்பவம்
August 5, 2026, 2:51 pm
