செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருநெல்வேலியில் போர்க்களமாக மாறிய காங்கிரஸ் அலுவலகம்: அடித்துக்கொண்ட காங்கிரஸ் மாவட்டத்தலைவர்கள்
நெல்லை:
நெல்லையில் காமராஜர் பிறந்தநாள் விழாவின் போது, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையிலேயே முன்னாள் மாவட்ட தலைவர்கள் இருவர் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வண்ணார்பேட்டையில் உள்ள நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் ராமேஷ்வரன் தலைமையில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு தொடங்கியது.
முன் வரிசையில் நிற்பது தொடர்பாக வாக்குவாதம்
அப்போது, திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சங்கர பாண்டியன் மற்றும் உமாபதி சிவன் ஆகியோருக்கு இடையே புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் போது, முன் வரிசையில் நிறுப்பது தொடர்பாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
போர்க்களமாக மாறிய காங்கிரஸ் அலுவலகம்
முதலில் வாய்மொழியாகத் தொடங்கிய இந்த மோதல், சில நிமிடங்களிலேயே முற்றியது. இதில் ஆத்திரமடைந்த இருவரும், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் மற்றும் பிற நிர்வாகிகள் முன்னிலையிலேயே ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதனால் காங்கிரஸ் அலுவலகமே போர்க்களமாக மாறியது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 8:02 pm
மகன் இன்பநிதி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள மனைவியுடன் உதயநிதி லண்டன் பயணம்
July 12, 2026, 12:39 pm
