செய்திகள் தமிழ் தொடர்புகள்
அரசு மின்னணு சேவை மையங்கள், ஆதார் பதிவு மையங்கள் ஜூலை 20 அன்று செயல்படாது
சென்னை:
தமிழ்நாடு தரவுப் பதிவுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோபி குமார் மற்றும் பொதுச் செயலாளர் மனோஜ் குமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில்:
நிரந்தர ஆதார் பதிவு மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கும் ஒப்பந்ததாரரான தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் அரசு மின்னணு சேவை மையம், ஒவ்வொரு மாதமும் அவர்களின் சம்பளத்திலிருந்து முறையற்ற வகையில் பிடித்தம் செய்வதுடன், பிஎஃப் மற்றும் இஎஸ்ஐ உள்ளிட்ட சலுகைகளையும் முறையாக வழங்கவில்லை.
முதலமைச்சரும், தகவல் தொழில்நுட்ப அமைச்சரும் இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு ஒரு தீர்வைக் காண வேண்டும்.
மேலும், மின்னணு சேவை மைய ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 20 அன்று சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் செயல்படும் மின்னணு சேவை மையங்கள் மற்றும் ஆதார் பதிவு மையங்களில் பணிபுரியும் 600க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர்.
இது தொடர்பாக, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்களில் அமைந்துள்ள அரசு மின்னணு சேவை மையங்கள் மற்றும் ஆதார் பதிவு மையங்கள் அன்று செயல்படாது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 9:58 am
நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று தமிழக பேரவையில் தனித் தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது
August 10, 2026, 1:16 pm
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு
August 9, 2026, 1:40 pm
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் 50-வது ஆண்டு விழாவை பயணிகள் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
August 5, 2026, 4:09 pm
மூத்த குடிமக்களுக்கான இல்லம்: நிதியமைச்சர் மரிய வில்சன்
August 5, 2026, 4:05 pm
8 கிராம் தங்கம், பட்டுப் புடவையுடன் ‘அண்ணன் சீர்’ திட்டம்: தமிழக பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு
August 5, 2026, 3:59 pm
