செய்திகள் உலகம்
டொராண்டோ சல்சா திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
டொராண்டோ:
கனடாவின் டொராண்டோ நகரில் ஆண்டுதோறும் 'சல்சா ஆன் செயின்ட் கிளேர்' தெருத் திருவிழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
22-ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த திருவிழாவின் முதல் நாளில், குழந்தைகள், பெரியவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இசையையும் நடனத்தையும் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென துப்பாக்கி முழங்கும் சத்தம் கேட்டது.
இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், அவர்கள் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர்.
இதனால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. துப்பாக்கிசூடு சத்தம் கேட்டு மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்த சம்பவத்தில் குண்டுபாய்ந்து சம்பவ இடத்திலேயே ஒருவரும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மற்றொருவருமாக மொத்தம் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
மேலும், ஆறு பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:53 am
அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும்: ஈரான்
July 11, 2026, 6:55 pm
பெருவில் பிறந்த 500 குழந்தைகளுக்கு "எர்லிங் ஹாலண்ட்" பெயர் சூட்டப்பட்டுள்ளது
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
