செய்திகள் மலேசியா
சிலாங்கூர் மாநில ஆட்சியாளர் சுல்தான் ஷாராஃபுதின் இட்ரிஸ் ஷா எல்.ஆர்.டி 3 இலகு ரயிலில் பயணித்தார்
கோலாலம்பூர்-
சிலாங்கூர் மாநில ஆட்சியாளர் சுல்தான் ஷாராஃபுதின் இட்ரிஸ் ஷா இன்று எல்.ஆர்.டி 3 இலகு ரயிலில் பயணம் செய்தார்.
சுல்தான் ஷாராஃபுதின் இட்ரிஸ் ஷா அவர்களுடன் தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் மற்றும் ராஜா மூடா சிலாங்கூர் ஆகியோர் பயணம் செய்தனர்.
புதிதாக திறக்கப்பட்ட எல்.ஆர்.டி 3 இலகு ரயிலில் மேன்மை தங்கிய சுல்தான் அவர்கள் பண்டார் உத்தாமா தொடங்கி ஜொஹான் செத்தியா வரை பயணித்தார்
"அல்ஹம்துலில்லாஹ், ஷா ஆலம் LRT3 வழித்தடம் இப்போது நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தத் தாமதத்தின் மூலம் அல்லாஹ் ஒரு ஞானத்தைக் காட்ட விரும்புகிறான் என்று நான் நம்புகிறேன்," என்று கூறிய அவர், காத்திருப்பு முழுவதும் பொறுமையாக இருந்த சிலாங்கூர் மக்களைப் பாராட்டினார்.
மேலும், 10 ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் நீடித்த கட்டுமானப் பணியில் பங்களித்த பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலாளர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் உள்ளிட்ட 13,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சுல்தான் புகழஞ்சலி செலுத்தினார்.
ஷா ஆலம் LRT3 வழித்தடம், ஜூன் 28 அன்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது, தற்போது ஒரு மாதம் முழுவதும் பொதுமக்கள் இந்த எல்.ஆர்.டியில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2026, 5:02 pm
நஜிப்பின் விடுதலைப் பிரச்சினையை எழுப்பத் தேவையில்லை: ங்காவை ஜாஹித் சாடினார்
July 13, 2026, 4:58 pm
திருத்தம் செய்யப்பட்ட MCMC சட்டம் மக்களவையில் தாக்கல்
July 13, 2026, 4:28 pm
காஜாங்கில் சாலை விபத்து: இளம் தொழில்நுட்ப வல்லுநர் பலி
July 13, 2026, 3:35 pm
'ஹஜ் பயணத்திற்கு முதலில் பதிவு செய்தவருக்கே முன்னுரிமை': துணை அமைச்சர் மர்ஹமா ரோஸ்லி
July 13, 2026, 1:11 pm
