நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத் தேர்தல்; தேசிய முன்னணிக்கு வாழ்த்துகள்: பிரதமர்

கோலாலம்பூர்:

ஜொகூர் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய முன்னணிக்கு எனது வாழ்த்துகள்.

இனி முன்னோக்கி செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எனது வாழ்த்துகள்.

மேலும் செழிப்பான மற்றும் முற்போக்கான ஒரு மாநிலத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படவும், முன்னேறிச் செல்லவும் இதுவே சரியான நேரம்.

தேசிய முன்னணி தனது பொறுப்புகளை மாநிலம், அதன் மக்களின் நலனுக்காக நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன்.

மேலும், ஜொகூர் மாநிலத்திற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியதோடு,

புத்ராஜெயா மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி, அதன் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset