நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாக்குப்பதிவு நிறைவடைந்தது: வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன 

ஜோகூர் பாரு:

ஜொகூரில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது.

மாலை 5 மணி நிலவரப்படி 67.44 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்.

அது சுமார் 1.8 மில்லியன் வாக்காளர்களுக்குச் சமம் என்று தேர்தல் ஆணையம் கூறியது.

வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன 

இன்று சுமார் 1,100 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

ஜொகூர் சட்டமன்றத்தில் மொத்தம் 56 இடங்கள்.

தேர்தலுக்கு 2.7 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.

சட்டமன்றத் தேர்தலின் முடிவில் வாக்குப் பதிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

இன்று இரவு 10 மணிக்குள் முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset