செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத் தேர்தலில் 4 தொகுதிகளையும் வென்று மஇகா புதிய வரலாறு
ஜொகூர்பாரு:
ஜொகூர் மாநிலத் தேர்தலில் மஇகா போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்று புதிய வரலாற்றை படைத்துள்ளது.
16ஆவது ஜொகூர் மாநிலத் தேர்தல் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்தது.
இந்த தேர்தலில் தேசிய முன்னணி 45க்கும் மேற்ப்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இத்தேர்தலில் மஇகா போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
கெமெலேவில் போட்டியிட்ட ஜொகூர் மாநில மஇகா தொடர்பு குழு தலைவரான ரவீன்குமார் மகத்தான வெற்றியை பெற்றார்.
அதே போன்று புக்கிட் பத்துவில் குமரனும் கஹாங்கில் ருகேந்திரனும் வெற்றி பெற்றனர்.
மேலும் பெர்லிங் சட்டமன்றத் தொகுதியில் பன்னீர் செல்வத்தின் வெற்றி மஇகாவுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
பல தவணைகள் எதிர்க்கட்சிகள் வசம் இருந்த இத்தொகுதியில் முதல் முறையாக களமிறங்க மஇகா வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் தலைமையிலான மஇகாவின் இந்த வெற்றி அக்கட்சிக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 12:20 am
ஜொகூர் மாநிலத் தேர்தல்; தேசிய முன்னணிக்கு வாழ்த்துகள்: பிரதமர்
July 12, 2026, 12:19 am
ஜொகூர் தேர்தலில் தேசிய முன்னணி எளிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது: தேர்தல் ஆணையம்
July 11, 2026, 11:04 pm
ஜொகூர் தேசிய முன்னணி அரசு அனைத்து இன மக்களையும் பாதுகாக்கும்: ஓன் ஹபிஸ்
July 11, 2026, 11:02 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல்; 45க்கும் மேற்பட்ட இடங்களை தேசிய முன்னணி வென்றுள்ளது: ஜாஹித்
July 11, 2026, 9:37 pm
தேசிய முன்னணியை மீண்டும் தேர்ந்தெடுத்ததற்கு ஜோகூர் மக்களுக்கு நன்றி: ஒன் ஹஃபிஸ் காஸி
July 11, 2026, 9:27 pm
ஜோகூர் தேர்தல்: பெண்டாயனில் பக்காத்தான் முதல் வெற்றியைப் பெற்ற்றுள்ளது
July 11, 2026, 4:29 pm
