நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் தேசிய முன்னணி அரசு அனைத்து இன மக்களையும் பாதுகாக்கும்: ஓன் ஹபிஸ்

ஜொகூர்பாரு:

ஜொகூர் மாநிலத் தேர்தலில் கிடைத்த வெற்றி அனைத்து இன மக்களையும் பாதுகாக்க மக்கள் கொடுத்த ஆணையாகும்.

தேசிய முன்னணியின் வெற்றியை அறிவித்த அதன் தலைவர் ஓன் ஹபிஸ் காசி கூறினார்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்த பதவிக் காலத்திலும் மக்களுக்கு இன்னும் சிறப்பாகச் சேவை செய்வதை தேசிய முன்னணி தொடரும்.

இந்த அசாதாரண வெற்றி மாநிலக் கூட்டணிக் கட்சித் தலைமைக்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அளித்துள்ளது.

கடந்த  2022 ஜொகூர் மாநிலத் தேர்தலில் பிஎன் 40க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வழிவகுத்த ஜொகூர் மக்களின் வலுவான ஆதரவிற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset