செய்திகள் மலேசியா
எண்ணெய் விலை உயர்வு குறித்து போலியான தகவல் பரப்பிய சம்பவம்: இல்லத்தரசிக்கு 4000 ரிங்கிட் அபராதம் விதிப்பு
சிப்பாங்-
த்ரெட்ஸ் செயலி மூலமாக எண்ணெய் விலை உயர்வு குறித்து போலியான தகவலைப் பரப்பியதாக இல்லத்தரசி ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் 4 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது
தனக்கு எதிரான குற்றத்தை அந்த மாது ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது
போலியான செய்தியையும் அதன் உள்ளடங்களையும் சமூக ஊடக ஒன்றில் பகிர்ந்ததையும் அவர் இந்த குற்றச்சாட்டை கடந்த மார்ச் 31ஆம் தேதி புரிந்ததாக குற்றப்பத்திரிக்கையில் தாக்கல் செய்யப்பட்டது
1998 தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் செக்ஷன் 233(1)(ஏ)யின் கீழ் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டது
போலியான செய்திகளையோ அல்லது தகவல்களையோ பொதுமக்களுக்குப் பரப்புவதால் சமூகங்களில் பெருமளவில் குழப்பங்களும் நம்பகத்தன்மையும் அதிகம் ஏற்படும் என்று நீதிபதி அஹ்மத் ஃபுவாட குறிப்பிட்டார்.
-மவித்திரன்
