செய்திகள் மலேசியா
பந்திங் பள்ளியில் கத்திக்குத்து சம்பவம்: பள்ளி மாணவி சீரான நிலையில் உள்ளார்
பந்திங்:
இன்று காலை பந்திங்கில் உள்ள ஒரு பள்ளியில், ஒரு பெண்ணால் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் பள்ளி மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்திய கோலா லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் முஹம்மது அக்மல்ரிசல் ராட்ஸி, பாதிக்கப்பட்ட மாணவி நலமுடன் இருப்பதாகவும், மேலதிக விவரங்கள் விரைவில் பகிரப்படும் என்றும் கூறினார்.
தொடர்பு கொண்டபோது, "ஆம், சம்பவம் நடந்தது. உறுதிப்படுத்துவதற்காக ஒரு ஆரம்பகட்ட பத்திரிக்கை அறிக்கை வெளியிடப்படும், மேலும் பாதிக்கப்பட்டவர் நலமுடன் இருக்கிறார்," என்று அவர் கூறினார்.
முன்னதாக, சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொலியில், கருப்பு உடை அணிந்த ஒரு பெண் கத்தியை ஏந்தியபடி பள்ளி வளாகத்தைச் சுற்றி நடமாடியதால் பள்ளியில் ஏற்பட்ட குழப்பம் காட்டப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2026, 6:27 pm
ஈமான் கட்சியின் தேசியத் தலைவராக டத்தோ இஸ்மாயில் போட்டியின்றி தேர்வு
July 6, 2026, 5:54 pm
மேடையில் சுல்தான் நஸ்ரினை இழுத்த பெண்மணிக்கு 500 ரிங்கிட் அபராதம் விதிப்பு
July 6, 2026, 5:46 pm
ஜொகூரின் வடப் பகுதிகளின் வளர்ச்சிக்கான நேரம் வந்துவிட்டது: யுனேஸ்வரன்
July 6, 2026, 3:44 pm
மலாக்காவில் நடந்த நட்புமுறை ஆட்டத்தின் போது மின்னல் தாக்கியதில் வீரர் தனேஷ் மரணம்
July 6, 2026, 1:36 pm
