நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: மொராக்கோ முன்னேற்றம், நெதர்லாந்து ஏமாற்றம்

மெக்சிகோ:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் மொராக்கோ அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய வேளையில் நெதர்லாந்து அணியினர் போட்டியில் இருந்து வெளியேறினர்.

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் சுற்று 32 சுற்றில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து , மொராக்கோ அணிகள் மோதின.

மெக்சிகோவில் நடந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.

இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் 0-0 என்ற நிலையில் இருந்தன.

பிற்பாதியில் ஆட்டம் சூடுபிடித்தது. ஆட்டத்தின் 72ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து கோல் அடித்தது. இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் 90 நிமிடங்கள் முடிந்த நிலையில் 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து முன்னிலையில் இருந்து.  இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது, ஆட்டத்தின் 91ஆவது நிமிடத்தில் மொராக்கோ கோல் அடித்தது. 

இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன. தொடர்ந்து போராடிய இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காதால் ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பரபரப்பாக நடந்த பெனால்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி மொராக்கோ அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம்  சுற்று 16க்குள் மொராக்கோ நுழைந்தது. அதேவேளை, வலுவான நெதர்லாந்து அணி நடப்பு உலகக் கிண்ண போட்டியில் இருந்து வெளியேறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset