செய்திகள் மலேசியா
அரசு ஊழியர் போல் நடித்து பொதுமக்களை ஏமாற்றிய சந்தேக நபரை காஜாங் காவல்துறை தேடி வருகிறது
காஜாங்:
பாதுகாப்புப் படை சீருடையை அணிந்து, அரசு அலுவலகம் போன்ற பின்னணியைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி, அரசு ஊழியர் போல் நடித்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு நபரை காவல்துறை தேடி வருகிறது என்று காஜாங் காவல்துறைத் தலைவர் ஏசிபி நஸ்ரான் அப்துல் யூசோஃப் கூறினார்.
அரசு ஊழியர் போல் நடித்ததற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 170-இன் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
"இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணைக்கு உதவுவதற்காக, விசாரணை அதிகாரி சார்ஜென்ட் சித்தி ஐதா யெம்மை 010-2176278 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு குற்றச் செயலையும் MERS 999 அவசரத் தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது காஜாங் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டு மையத்தை 03-8911 4243 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ புகாரளிக்குமாறு நஸ்ரான் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2026, 4:48 pm
அம்னோ-பாஸ் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன: புவாட் குற்றச்சாட்டு
June 29, 2026, 3:03 pm
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வாரியக்குழு உறுப்பினராக தியாகராஜ் நியமனம்
June 29, 2026, 2:56 pm
தமிழ் இலக்கணமும் இலக்கியமும் பண்புமிக்க தலைமுறையை உருவாக்கும்: யுனேஸ்வரன்
June 29, 2026, 12:24 pm
துர்நாற்றம் வீசிய வீட்டில் பயணப் பெட்டியில் இருந்த பெண்ணின் சடலம் மீட்பு
June 29, 2026, 12:23 pm
