நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துர்நாற்றம் வீசிய வீட்டில் பயணப் பெட்டியில் இருந்த பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்:

துர்நாற்றம் வீசிய வீட்டில் பயணப் பெட்டியில் இருந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காஜாங்கில் உள்ள தாமான் இம்பியான் இந்தாவில் நிகழ்ந்தது.

சம்பந்தப்பட்ட குடியிருப்பில் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.

இந்த துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல், குடியிருப்பாளர் ஒருவர் இரவு 7 மணிக்கு போலிசாரை தொடர்பு கொண்டதை அடுத்து அந்தச் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் போலிஸ் ஆய்வு நடத்துவதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.

சம்பவ இடத்திற்கு வந்த போலிசார்  வீட்டை சோதனை  செய்தபோது, ​​ பயணப் பெட்டியில் ஒரு பெண்ணின் சடலத்தையும் கண்டுபிடித்தனர்.

முன்னதாக   காஜாங் மாவட்ட போலிஸ் தலைவர்,  நஸ்ரோன் அப்துல் யூசோப் இந்த சம்பவத்தை உறுதி செய்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset