நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: இங்கிலாந்து, குரோஷியா முன்னேற்றம்

நியூஜெர்சி:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் சுற்று 32க்கு இங்கிலாந்து, குரோஷியா அணிகள் முன்னேற்றியுள்ளன.

மெட்லைப் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணியினர் பனமா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பனமா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இங்கிலாந்து அணியின் வெற்றி கோல்களை ஜூல் பெலிங்காம், ஹாரி கேய்ன் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து இங்கிலாந்து அணியினர் எல் பிரிவில் 7 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தனர்.

இதம் மூலம் அடுத்த சுற்றுக்கும் இங்கிலாந்து அணியினர் முன்னேறி உள்ளனர்.

மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

குரோஷியா அணியின் வெற்றி கோல்களை பீட்டர் சுஜிக், நிகோலா விலாசிக் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து குரோஷியா அணியினரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset