செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் மின்வெட்டு பிரச்சினை: இரவு நேரங்களில் வீதிகளில் இறங்கி போராடும் மக்கள்
சென்னை:
சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் மின்வெட்டு பிரச்சினை தீவிரமாக உள்ளது. ஒருசில இடங்களில் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.
குறிப்பாக, முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் உள்ள வியாசர்பாடி பகுதியில் நேற்றுமுன்தினம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, முதல்வர் விஜய் வசிக்கும் நீலாங்கரை பகுதியிலும் நேற்றுமுன்தினம் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முட்டுக்காடு பகுதியில் திருப்போரூர் எம்எல்ஏ விஜயராஜிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை எம்எல்ஏ சமாதானம் செய்ய முயன்றார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணியிலும் மின்வெட்டு கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக, மாற்று கம்பிகளை பொறுத்தி அந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டோம். இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட வெப்பமும், அதிக சுமையும் முக்கிய காரணிகளாக உள்ளன. மின்விநியோக கட்டமைப்பில் இருக்கும் கருவிகளில் அதிக வெப்பம் ஏற்படும் போது அவை பழுதடைகின்றன என்று மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2026, 2:57 pm
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்
July 25, 2026, 2:53 pm
“என்னிடமிருந்து மைக்கை பறிப்பதுதான் ஜனநாயகமா?” - நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்
July 23, 2026, 7:33 am
இந்திய அஞ்சல் துறை பெயரில் நூதன சைபர் மோசடி: பொதுமக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை
July 21, 2026, 4:59 pm
உயிரி-எரிவாயு ஆலையில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்
July 20, 2026, 3:08 pm
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ கைது
July 19, 2026, 6:30 pm
10 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
July 16, 2026, 3:09 pm
தவறு செய்தால் அமைச்சர் பதவி உடனடியாக பறிக்கப்படும்: முதல்வர் விஜய் எச்சரிக்கை
July 16, 2026, 12:57 pm
