நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னையில் மின்வெட்டு பிரச்சினை: இரவு நேரங்களில் வீதிகளில் இறங்கி போராடும் மக்கள்

சென்னை:

சென்னையிலும் புறநகர் பகு​தி​களிலும் மின்​வெட்டு பிரச்​சினை தீவிர​மாக உள்​ளது. ஒருசில இடங்​களில் பல மணி நேரம் மின்​வெட்டு ஏற்​படு​கிறது. 

குறிப்​பாக, முதல்​வர் விஜய்​யின் பெரம்​பூர் தொகு​தி​யில் உள்ள வியாசர்​பாடி பகு​தி​யில் நேற்​று​முன்​தினம் மக்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

குறிப்​பாக, முதல்​வர் விஜய் வசிக்​கும் நீலாங்​கரை பகு​தி​யிலும் நேற்​று​முன்​தினம் மின்​வெட்டு ஏற்​பட்​டது. இதனால், பொது​மக்​கள் கூடு​வாஞ்​சேரி மின்​வாரிய அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்டு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். 

முட்​டுக்​காடு பகு​தி​யில் திருப்​போரூர் எம்​எல்ஏ விஜய​ராஜிடம் பெண்​கள் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களை எம்​எல்ஏ சமா​தானம் செய்ய முயன்​றார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணியிலும் மின்வெட்டு கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

உடனடி​யாக, மாற்று கம்​பிகளை பொறுத்தி அந்த பிரச்​சினைக்கு தீர்வு கண்​டோம். இரவு நேரங்​களில் மின்​தடை ஏற்பட வெப்​ப​மும், அதிக சுமை​யும் முக்​கிய காரணி​களாக உள்​ளன. மின்​விநி​யோக கட்​டமைப்​பில் இருக்​கும் கருவி​களில் அதிக வெப்​பம் ஏற்​படும் போது அவை பழுதடைகின்​றன என்று மின்​வாரிய அதி​காரி​கள் கூறினர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset