நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குவைத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: விஸ்மா புத்ரா

புத்ராஜெயா:

குவைத் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன், ஏவுகணைத் தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சு குவைத்தில் உள்ள மலேசியத் தூதரகம் மூலம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

மேலும், அந்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மலேசியக் குடிமக்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று அது உறுதிப்படுத்தியுள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து, விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து வணிக விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன.

இந்த இடையூறால் பயணத் திட்டங்கள் பாதிக்கப்பட்ட மலேசியர்கள், மாற்று ஏற்பாடுகள் மற்றும் விமானப் பயணத்தை மறுதிட்டமிடுவதற்காக தத்தமது விமான நிறுவனங்களை நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset