நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

10 ஆண்டு மலேசிய கடப்பிதழுக்கான கட்டணம் 350 ரிங்கிட்

புத்ராஜெயா:

10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடவுச்சீட்டிற்கான கட்டணம் 350 ரிங்கிட் என நேற்று வெளியிடப்பட்ட அரசாங்க அரசிதழின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் கையெழுத்திட்ட அரசிதழின் படி,

60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களுக்கு 175 ரிங்கிட் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் அட்டை வைத்திருப்பவர்களுக்குக் கடப்பிதழ் இலவசமாக வழங்கப்படுகின்றன.

தற்போது, ​​மலேசியர்களுக்கு ஐந்து வருடங்கள் செல்லுபடியாகும் கடப்பிதழுக்கு 200 ரிங்கிட் கட்டணமும், மூத்த குடிமக்களுக்கு 100 ரிங்கிட் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

சேதமடைந்த அல்லது தொலைந்துபோன கடவுச்சீட்டுகளை மாற்றுவதற்கான கட்டணத்தையும் அரசிதழ் நிர்ணயித்துள்ளது.

இதில், 13 முதல் 59 வயதுக்குட்பட்ட குடிமக்களுக்கு முதல் முறை மாற்றுவதற்கான கட்டணம், முன்பு 400 ரிங்கிட்டாக இருந்த நிலையில், தற்போது 550 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

இரண்டாவது முறை மாற்றுவதற்கு 850 ரிங்கிச் கட்டணமும், அதைத் தொடர்ந்து மாற்றுவதற்கு 1,350 ரிங்கிட் கட்டணமும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset